Kolams

Kolam is a form of meditation. It improves our mind strength and concentration. After finishing the kolam perfectly, it gives us happiness. Kolams are thought to bestow prosperity to homes. Kolams are drawn using rice powder, thereby we unknowingly feed the insects and birds.

Showing posts with label Thiruvilakku slokam. Show all posts
Showing posts with label Thiruvilakku slokam. Show all posts

Monday, December 5, 2011

Karthigai Thiruvilaku Slokam

விளக்கே! திருவிளக்கே! வேதன்-உடன்பிறப்பே!
ஜோதி மணிவிளக்கே ஸ்ரீ தேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே-காமாக்ஷித்-தாயாரே
பசும் பொன் விளக்குவைத்துப்-பஞ்சுத்திரி-போட்டுக்
குளம்போல நெய்விட்டுக்-கோலமுடன்-ஏற்றி-வைத்தேன்
ஏற்றினேன் நெய்விளக்கு, எந்தன்-குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு, மாளிகையும்-தான்-விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக்-கண்டு-கொண்டேன்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை-தாருமம்மா!
ஸந்தானப் பிச்சையுடன் தனங்களும்-தாருமம்மா!
பெட்டி நிறையப் பூஷணங்கள்-தாருமம்மா!
பட்டி நிறையப் பால் பசுவைத்-தாருமம்மா!
கொட்டில் நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தந்து என் பக்கத்தில்-நில்லுமம்மா!
அல்லும் பகலும் என்றன் அண்டையிலே-நில்லுமம்மா!
சேவித் தெழுந்திருந்தேன்; தேவி வடிவு கண்டேன்
வஜ்ஜிரக் கிரீடங் கண்டேன்-வைடூர்ய-மேனி-கண்டேன்
 முத்துக் கொண்டை கண்டேன்; முழுப் பச்சைமாலை கண்டேன்
சவுரிமுடியக் கண்டேன்; தாழைமடல்-சூடக்கண்டேன்
பின்னழகு கண்டேன்; பிறைபோல்-நெற்றிகண்டேன்
சாந்துடன் நெற்றிகண்டேன்; தயார் வடிவங்-கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப்-பொட்டு-கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக்-கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணையாழி-மின்னக்கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென-ஜொலிக்கக்-கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் பாலாழி-பீலிகண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு-கொண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து-காத்திடுவாய்
வந்த வினையகற்றி மஹாபாக்யம்-தந்திடுவாய்!
தாயாரே உந்தன் தாளடியில் சரணம்-என்றேன்
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்
குடும்பக் கொடி விளக்கே! குற்றங்கள்-பொறுத்திடுவாய்
குறைகள் தீர்த்திடுவாய்! குடும்பத்தைக்-காத்திடுவாய்
தந்தையும் தாயும் நீயே தயவுடனே-ரக்ஷிப்பாய்!
கருணைக்கடல் நீயே!
கற்பகவல்லி நீயே ஸகல கலாவல்லி தாயே ரக்ஷிப்பாய்!
தஞ்சம் உனையடைந்தேன்! துக்கமெல்லாம்-போக்கிடுவாய்!
அபிராமவல்லி அம்மா! அடைக்கலம் நீயே-அம்மா!
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே-ஸர்வார்த்த-ஸாதிகே |
சரண்யே த்ர்யம்பிகே தேவி நாராயணி நமோ-(அ)ஸ்துதே-||
ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம்-தேஹி-மஹேச்வரி |
ஸமஸ்தம் அகிலம் தேஹி தேஹி மே பரமேச்வரி ||
அன்யதா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம |
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ மஹேச்வரி||
Related Posts Plugin for WordPress, Blogger...